மும்பையில் உள்ள குர்லா என்ற பகுதியின் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டிடம்  தீடிரென சரிந்ததில் தற்போது உயிர் சேதம் எதுவும் இல்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


மும்பையில் தொடரும் கனமழை காரணமாக புறநகர் உட்பட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பலத்த மழை பெய்து வருவதால் சாலைப் போக்குவரத்தும், ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 


பலத்த மழை பெய்துகொண்டே இருக்கும் நிலையில் குர்லா உள்ள மூன்று மாடி கட்டிடத்திம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு உண்டானது. தற்போது அங்கு தீயணைப்பு படை மீட்பு பணிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர்.