மும்பை: மும்பையில் கனமழையால் அதிர்ச்சி அளிக்கும் பல சம்பவங்களும் நடக்கத் தொடங்கியுள்ளன. மும்பை (Mumbai) நாலசோபரா பகுதியில் பெய்த கனமழை காரணமாக நேற்று (புதன்கிழமை) 6 வயது குழந்தை திறந்திருந்த சாக்கடையில் விழுந்தது. அந்த குழந்தையை தேடும் பனி நள்ளிரவு வரை மேற்கொள்ளப்பட்டது. சாக்கடையில் விழுந்த குழந்தையின் உடல் இறந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை மீட்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சம்பவம் மும்பையின் நலாசோபராவில் நடந்தது. சாக்கடையில் விழுந்த குழந்தையின் பெயர் அபுபக்கர் ஷேக். அந்த குழந்தை நாலசோபராவில் சந்தோஷ் பவன் பகுதியில் வசித்து வந்தனர். 


மும்பையில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் தண்ணீர் வெள்ளம் போல தேங்கி உள்ளது. இதனால் சாலையில் பள்ளம் உள்ளது என்பதை அறியாத பலர் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல பல பகுதிகளில் சாக்கடை திறந்து வைத்திருப்பதால் இதுபோன்ற சம்பவம் நடைபெற்று வருகிறது.