நாகலாந்து மாநிலம் மியான்மர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மோன் மாவட்டத்தில், நம்பகமான உளவுத் தகவலின் அடிப்படையில் ராணுவம் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட போது, ஒடிங் என்ற கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், மீது   தவறுதலாக,  ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இது குறித்து நாகா மக்கள் இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனித உரிமைகளுக்கான நாகா மக்கள் இயக்கம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நாகாலாந்தில்  இராணுவம்  மற்றும் துணை ராணுவ படைகள் அங்குள்ள சிவிலியன்கள் மீது தாக்குதல் நடத்துவது 1954 ஆம் ஆண்டு முதல் தொடர் கதையாகி வருகிறது என சாடியுள்ளது.  அந்த வகையில், நாகா மக்கள் படு கொலை நிகழ்த்தப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்திற்கு ஆதரவாக நாகா மக்கள் இயக்கம் தொடர்ந்து பாடுபடும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தனது உரிமைகளுக்குகான தொடர்ந்து போராட்டி வரும் நாகாலாந்து மக்கள் இப்போது, அச்ச உணர்வுடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அறிக்கையில் கடுமையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ALSO READ | நாகலாந்து துப்பாக்கி சூடு சம்பவம்; உயர் மட்ட விசாரணைக்கு முதல்வர் உத்தரவு


இதற்கிடையில், நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 13 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஏற்கனவே சிறப்பு புலனாய்வு குழுவை ( SIT) அமைத்திருக்கும் மாநில முதல்வர் நெய்பியு ரியோ (Neiphiu Rio), திங்கள்கிழமை மோன் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என நாகாலாந்து அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | இந்தியாவில் வயது வந்தோரில் பாதி பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி வழங்கி சாதனை!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR