டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் பெண்களின் தலைமுடி நறுக்கப்படுவது பரப்பரப்பு ஏப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் வீட்டில் உள்ள பெண்களின் தலை முடியை யாரோ மர்மமான முறையில் நறுக்கி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 


தென்மேற்கு டெல்லியில் உள்ள சாவ்லா பகுதியில் வீட்டில் இருந்த 4 பெண்களின் தலைமுடி மர்மமான முறையில் நறுக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் நேற்று இரவு 49 வயது பெண் ஒருவரின் தலைமுடி மர்ம நபரால் நறுக்கப்பட்டுள்ளது. கதவை பூட்டிக் கொண்டு வீட்டில் இருக்கும் பெண்களின் தலைமுடி நறுக்கப்படுகிறது. யாரும் கதவை உடைத்துக் கொண்டு வரவும் இல்லை என்பதால் போலீசார் குழம்புகிறார்கள். 


நிபுணர்கள் தலைமுடி பிரச்சனை தொடர்பாக மனநல நிபுணர்களின் உதவியை நாடியுள்ளனர் போலீசார். இந்த வழக்கில் இதுவரை போலீசாருக்கு எந்தவித துப்பும் கிடைக்கவில்லை.