ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் தியோகர் மாவட்டத்தில் வங்கி ஒன்றில் ஆயதங்களுடன் வந்த கொள்ளையர்கள் ரூ. 90 லட்சம் கொள்ளையடித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தியோகரில் உள்ள ஆசாத் என்னுமிடத்தில் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியாவின்(யுபிஐ) கிளையில் அடையாளம் தெரியாத எட்டு குற்றவாளிகளின் கும்பல், துப்பாக்கி முனையில் பணத்தை எடுத்துச் சென்றனர்.


வங்கி பணத்தை மட்டும் அல்லாமல் வங்கிக்கு பணம் செலுத்த வந்த வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை இவர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர், மேலும் இந்த சம்பவங்கள் பதிவான சி.சி.டிவி காட்சிகளையும் எடுத்துச் சென்றுள்ளனர்.


காவல்துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


இதேபோல் மற்றொரு சம்பவத்தில், பலமு மாவட்ட சட்டரபூர் பகுதியில் பெட்ரோல் பங்கில் இருந்து ரூ 3 லட்சம் மற்றொரு மர்மகும்பல் கொள்ளையடித்துள்ளனர்.