கேரள மாநிலம் கொச்சியில் இன்று மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். 
அலுவா முதல் பேட்டா வரையிலான 25 கிமீ தூரத்துக்கான மெட்ரோ ரயில் திட்டப் பணிக்கள் முடிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று காலை 11 மணியளவில் கொச்சி ஜவஹர்லால் நேரு சர்வதேச மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார்.


இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு, கேரள கவர்னர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். பிரதமரின் கொச்சி வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.