கட்சியை விடவும் நாட்டு நலன்தான் எனக்கு முக்கியம் என பாஜக மூத்த தலைவர் எல் கே அத்வானி தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாரதிய ஜனதா கட்சி உதயமான நாள் ஏப்ரல் மாதம் 6ம் தேதி. இதையொட்டி, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தனது வலைத்த்ள பக்கத்தில் சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில்,


எனக்கு நாட்டு நலனே முதன்மையானது. நாட்டுக்கு பிறகு கட்சியின் நலன். அதற்கு பிறகே சொந்த நலன். அரசியல் ரீதியாக மாறுபட்ட கருத்துடையவர்களை தேச விரோதிகள் என்பது பாஜகவின் கொள்கையல்ல. குஜராத் மாநிலம் காந்திநகர் பாராளுமன்ற தொகுதியில் என்னை 6 முறை வெற்றிபெற செய்த மக்களுக்கு நன்றி.


நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்த அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.