தெற்கு டெல்லியின் ஹூஸ் காஸ் பகுதியை சேர்ந்த விமான பணிப்பென் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று மாலை 4.30 மணியளவில் நடைப்பெற்ற இச்சம்பவத்தில் பலியான பெண்மனியின் பெயர் அனிஷா பத்ரா(39) என அடையாளம் காணப்பட்டுள்ளது.


ஜெர்மன் விமான நிலையத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றி வரும் இவரின் மறணத்திற்கான காரணம் குறித்து இதுவரை காரணங்கள் வெளியாகவில்லை. இறப்பதற்கு முன்னதாக தனது தற்கொலை விருப்பத்தினை குறித்து தனது கணவருக்கு செய்தி அனுப்பியுள்ளார்.


செய்தியினை பெற்ற அவரது கணவர் உடனடியாக தனது வீட்டியில் யாரேனும் உள்ளனரா என விசாரித்துள்ளார். யாரும் இல்லா பட்சத்தில் தானே வீட்டிற்கு விரைந்துள்ளார்.


பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தப் போது அவரது மனைவி முன்னதாவே மொட்டை மாடியில் இருந்து குதித்தது தெரியவந்துள்ளது. பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையல் பத்ராவினை அவரது கணவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.


எனினும் பத்ரா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மறணம் அடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து ஹூஸ் காஸ் காவல்நிலையம் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றது. தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.