மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மணிப்பூர் மாநிலத்தின் டேமங்லாங் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், டேமங்லாங் மலைப்பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டதில்,  அடிவாரத்தில் இருந்த வீடுகள், மண் குவியலால் மூடப்பட்டு தரைமட்டமாயின. மேலும், இந்த பேரிடரில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுவரை 7 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள இருவரின் சடலங்கள் தேடப்பட்டு வருகின்றன.