நொய்டா செக்டர் 32 பகுதியில் அமைந்துள்ள ஒரு வணிக வளாகத்தில் பராமரிப்பு ஊழியர் செய்த இந்த செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர் மீட்க அளிக்கப்பட்ட புகாரின் அடிபடையில்  21 வயது குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். வியாழக்கிழமை மாலை செக்டர் 32 இல் அமைந்துள்ள மாலில் பெண்ணும் அவரது கணவரும் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக நொய்டா போலீசார் தெரிவித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்த போது , "அந்த பெண் மல்டி பிராண்ட் ஷோரூமின் சோதனை அறைக்குள் இருந்தார். இந்த நேரத்தில் யாரோ சோதனை அறைக்குள் எட்டிப் பார்க்க முயற்சிக்கிறார்கள் என்பதை அவர் உணர்ந்தார். அவர் வெளியேறியபோது,ராமரிப்பு ஊழியர் வெளியே வருவதை கண்டுள்ளார்'அந்த பெண். 


அந்தப் பெண் உடனடியாக தனது கணவர் மற்றும் கடை ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


இந்த சம்பவம் தொடர்பாக நொய்டா செக்டர் 24 காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் உள்ளூர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார், அங்கு இருந்து அவர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.