CRPF படை வீரரை கொன்ற பயங்கரவாத ஜாஹித் தாஸ், ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

படுகொலை செய்யப்பட்ட பயங்கரவாதி,  அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள  வாகாமாவில் வசிக்கும் ஜாஹித் அஹ்மத் தாஸ் என படைகள் அடையாளம் கண்டுள்ளனர். இந்த ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி அனந்த்நாக் மாவட்டத்தில், பிஜ்பெஹாரா என்ற இடத்தில் மத்திய சேமக் காவல் படை CRPF மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மீதான தாக்குதலில் அவர் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | இந்தியா-சீனா எல்லை பிரச்சனை; லடாக் சென்ற பிரதமர் மோடி; உன்னிப்பாக கவனிக்கும் உலக நாடுகள்


ஸ்ரீநகர் (Srinagar): ஜம்மு-காஷ்மீரில் ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள மால்பாக் (Malbagh) பகுதியில் கடந்த இரவு முழுவதும் நடந்த ஒரு மோதலின் போது மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF), நடத்திய தாக்குதலில், ஒரு CRPF வீரரும், ஒரு பயங்கரவாதியும் வியாழக்கிழமை (ஜூன் 2) இரவு கொல்லப்பட்டனர்.


துப்பாக்கி குண்டு பட்டதால், படை வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். கடந்த 45 நாட்களில் ஸ்ரீநகரில் நடந்த மூன்றாவது மோதல் சம்பவம்  இதுவாகும்.


கொல்லப்பட்ட பயங்கரவாதி அனந்த்நாகில் உள்ள வாகாமாவில் வசிக்கும் ஜாஹித் அஹ்மத் தாஸ் என படைகள் அடையாளம் கண்டனர். இந்த ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி அனந்த்நாக், பிஜ்பெஹாரா என்ற இடத்தில் ஜாஹித் அஹ்மத் தாஸ் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப்  வீரர் ஒருவரும் ஆறு வயது குழந்தையும்  கொல்லப்பட்டனர். ஜூன் 30 அன்று, ஜாஹித் தாஸும் மற்ற இரண்டு பயங்கரவாதிகளும் அனந்த்நாகில் சுற்றி  வளைக்கப்பட்டனர். ஆனால், ஜாஹித் தாஸ் தப்பித்து விட்டார். மற்ற இரண்டு பயங்கரவாதிகளும் படைகளால் கொல்லப்பட்டனர்.


ALSO READ | இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் கூட்டணியை வலுப்படுத்த இந்தியா நடவடிக்கை


ஸ்ரீநகரின் மால்பாக் பகுதியில் நேற்று இரவு சிறப்பு நடவடிக்கைக் குழு மற்றும் CRPF இணைந்து,  கூட்டு பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். ஒரு சிஆர்பிஎஃப் படை வீரர் என்கவுண்டரின் போது கொல்லப்பட்டார்.


நேற்று அப்பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே துப்பாக்கி சூடு நடந்ததை, ஜம்மு-காஷ்மீர் காவல்துறை உறுதிசெய்தது.  ஸ்ரீநகரின் மால்பாக் பகுதியில் என்கவுண்டர் தொடங்கியுள்ளது. காவல்துறையும் பாதுகாப்பு படையினரும் பணியில் உள்ளனர். மேலும் விவரங்கள் வெள்யிடப்படும்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.


கூட்டு நடவடிக்கை குழு சந்தேகத்திற்கிடமான இடத்தை சுற்றி வளைத்தபோது, ​​மறைந்திருந்த பயங்கரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஒரு போலீஸ் அதிகாரி கூறினார். கூட்டு நடவடிக்கை குழு இதற்கு பதிலடி கொடுத்தது. என்கவுன்டர் நடந்தபோது 1-2 பயங்கரவாதிகள் அப்பகுதியில் பதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது.