புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் மேலும் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது நீதிமன்றம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க மறுத்த டெல்லி உயர் நீதிமன்றம், அவருடைய மனுவை கடந்த 20 ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து ப.சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனக்கோரிக்கை வைத்தனர்.


இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்தத்தோடு தலைமை நீதிபதியிடம் முறையிடுமாறு கூறினார். இதனையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்விடம் ப.சிதம்பரம் சார்பில் முறையிடப்பட்டது. ஆனால் அயோத்தி வழக்கை விசாரித்து வரும் சூழலில் உடனடியாக விசாரிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்தது.


இதனையடுத்து மீண்டும் ப.சிதம்பரம் தரப்பினர் நீதிபதி ரமணாவிடம் முறையிட்டனர். அப்பொழுது நீதிபதி ரமணா மீண்டும் மறுப்பு தெரிவித்ததோடு, ப.சிதம்பரம் மேல்முறையீடு மனு மீது இன்று(ஆகஸ்ட் 21) விசாரணை நடத்த முடியாது. ப.சிதம்பரம் மனு பட்டியலிடப்பட்ட பிறகே விசாரிக்கப்படும் என திட்டவட்டமாகக் கூறினார். இதன்மூலம் ப.சிதம்பரம் மேல்முறையீடு மனு மீது கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி விசாரணை நடைபெறாத நிலை ஏற்பட்டது.


இதைத் தொடர்ந்து, அன்று இரவு சிதம்பரம் கைது செய்து சிபிஐ தலைமை அலுவலகம் கொண்டு சென்றனர். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விடிய விடிய சிதம்பரத்திடம் விசாரணை நடத்தினர். அடுத்த நாள் அவரை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தினர். 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.


இந்தநிலையில், மேலும் 5 நாள் காவல் நீட்டிப்பை கோர சிபிஐ திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக சிபிஐ காவல் முடிந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு, நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார் ப.சிதம்பரம். அவரை மேலும் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது நீதிமன்றம்.