பாகிஸ்தான் தீவிரவாதிகள் ராணுவ வீரரை கொடூரமாக கொன்றுள்ளனர். இதற்க்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று இரவு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினர் மீது  துப்பாக்கி சூடு நடத்தினர். பின்னர் வீரர் ஒருவரை சிறைபிடித்த தீவிரவாதிகள் அவரை கொடூரமாக கொன்று உடலை துண்டுதுண்டாக வெட்டி வீசி சென்றுள்ளனர். தீவிரவாதிகளின் துப்பாக்கி தாக்குதலில் இரண்டு வீரர்கள் படுகாயம் அடைந்தனர். 


தீவிரவாதிகள் தாக்குதலில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இன்றும் ஆர்.எஸ்.புரா பகுதியில் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.