ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான பாம்போரா என்ற இடத்தில் மாநில அரசுக்கு சொந்தமான தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிலகத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த கட்டிட வளாகத்தில் இரண்டு மூன்று தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்த பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் பயங்கரமான துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகிறது. மூன்று தீவிரவாதிகளில் ஒருவன் கொல்லப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் 2 தீவிரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஒரு ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்.


இதே கட்டிடத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பாதுகாப்பு படைகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் தொடர்ந்து 48 மணிநேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது என்பது நினைவிருக்கலாம்.