பேடிஎம் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியான விஜய் சேகர் சர்மா ரூ.82 கோடியில் புதிய வீடு வாங்கியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் சேகர் சர்மா டெல்லியில் ரூ.82 கோடியில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இந்தியாவிலேயே ஆடம்பர ரியல் எஸ்டேட் சந்தையாக விளங்கும், டெல்லி கால்ஃப் லிங்க்ஸ் பகுதியில் விஜய் சேகர் தனது புதிய வீட்டை வாங்கியுள்ளார்.


பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக இணையதள வர்த்தகத்தில் பேடிஎம் சிறந்து விளங்குகிறது. விஜய் சேகரைத் தொடர்ந்து பிளிப்கார்ட் நிறுவன தலைவர்களும் புதிதாக ஒரு வீட்டினை கட்ட முடிவு செய்துள்ளனர். 


பேடிஎம் நிறுவனம் குறித்து நொய்டாவில் இயங்கு வரும் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசிய போது அவர்கள் பதிலளிக்க மறுத்துவிட்டனர். இதன் காரணமாக உலகளாவிய சொத்து ஆலோசர்களான சிஆர்பிஇ-ஐ தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவர்களை முறையாக தொடர்புகொள்ள முடியவில்லை. 


பேடிஎம் நிறுவனத்தில் விஜய் சேகர் ஷர்மா அவர்களுக்கு 16% பங்குகளும், பேமெண்ட்ஸ் வங்கி பிரிவில் 51% உரிமையையும் உள்ளது. மேலும், ஃபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் 1.3 பில்லியன் மதிப்புடன் விஜய் சேகர் சர்மா முதல் இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.