டெல்லி: உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநித்தை கைப்பற்றியுள்ள பாஜக ஆட்சி முதல்வர்களை தேர்வு செய்ய அக்கட்சியின் ஆட்சிமன்றக் குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் மாலை இக்கூட்டம் கூடுகிறது. முதலில் தேர்தல் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பிரதமர் மோடிக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து நடைபெறும் ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா மற்றும் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள், மூத்த தலைவர்கள் பங்கேற்கின்றனர். 


இதில் ஆட்சியை வசப்படுத்தி விட்ட உத்திரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களுக்கான முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவர் யார் என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.