பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு வரலாற்று சிறப்புமிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். நான்காவது முறையாக ஜி7 மாநாட்டில் மோடி பங்கேற்கிறார். ஜி7 மாநாட்டைத் தவிர 40க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் மோடி கலந்து கொள்கிறார். 24க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சில தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. ஜி7 மாநாட்டில் பங்கேற்குமாறு ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமரின் மூன்று நாடுகளுக்கான பயணம்


ஜப்பானில்  இருந்து பிரதமர் மோடி, பப்புவா நியூ கினியா செல்கிறார். இந்தியப் பிரதமர் ஒருவர் முதன்முறையாக அங்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவின் சிட்னி செல்கிறார். மொத்தத்தில், பிரதமர் மோடியின் ஆறு நாட்களுக்கான அட்டவணை மிகவும் பிஸியானதாக உள்ளது. பிரதமர் மோடியின் ஆறு நாள் பயணம் இந்தியாவிற்கு மிக முக்கியமானது. மாறிவரும் உலக சூழலில் இந்தியா தன் இருப்பை தொடர்ந்து உணர்த்தி, தவிர்க்க முடியாத முக்கியமான நாடாக இருந்து வருகிறது. எதிரியின் எதிரி நண்பன் என்பதால், சீனாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் அணிதிரண்டுள்ளன. இந்த பிரிவுவாதத்தை இந்தியா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.


மோடியின் ஜப்பான் பயணத்தின் முக்கியத்துவம்


ஹிரோஷிமாவில் நடைபெறும் 49வது ஜி7 மாநாட்டிற்கு உலக தலைவர்கள் வருகை தந்துள்ளனர். கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்தக் குழுவில் உள்ளன. விருந்தினராக இந்தியா அழைக்கப்பட்டுள்ளது. மூன்று முறையான அமர்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் இரண்டு அமர்வுகள் மே 20ஆம் தேதியும், மூன்றாவது அமர்வு மே 21ஆம் தேதியும் நடைபெறும். G7 உச்சிமாநாட்டின் அட்டவணையின்படி, முதல் அமர்வு உணவு மற்றும் ஆரோக்கியம் மற்றும் பாலின சமத்துவம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இரண்டாவது அமர்வு பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் என்ற பெயரில் நடைபெறும். மூன்றாவது அமர்வில், அமைதியான, நிலையான மற்றும் முற்போக்கான உலகம் என்ற தலைப்பில் விவாதிக்கப்படும். இந்தியா பல்வேறு மன்றங்களில் இருந்து மூன்று அமர்வுகளின் தலைப்புகளில் வலுவாகப் பேசி வருகிறது.


மேலும் படிக்க | பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை மே 28 அன்று திறந்து வைப்பார்!


ஜப்பான் விடுத்துள்ள அழைப்பு


இந்தியாவைத் தவிர மற்ற ஏழு நாடுகளுக்கு ஜப்பான் அழைப்பு அனுப்பியுள்ளது. ஜி7 மாநாட்டில் சீனாவும் ரஷ்யாவும் இடம்பெறாது. அதாவது, ஜி7 மாநாடு ஒருவகையில் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் எதிரான மேற்கத்திய நாடுகளின் மாபெரும் அமைப்பாக மாறியுள்ளது. இந்த ஆண்டு ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்குவதால், ஜி7 மாநாட்டில் அதன் இருப்பு முக்கியமானது என்று பிரதமர் மோடி கூறினார். உலகளாவிய சவால்கள் மற்றும் அவற்றை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றிய கருத்துக்களை G7 நாடுகள் மற்றும் அழைக்கப்பட்ட பிற சக ஊழியர்களுடன் பரிமாறிக் கொள்வேன். சில தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்தவுள்ளேன்.


G7 மாநாட்டில்  விவாதிக்கப்படும் விஷயங்கள்


ஜி7 கூட்டத்தில் முன்னுரிமைகள் தொடர்பான பல தலைப்புகள் விவாதிக்கப்படும் என்று வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்தார். நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு, பாதுகாப்பு, அணு ஆயுதக் குறைப்பு, பொருளாதார பாதுகாப்பு, பிராந்திய பிரச்சினைகள், காலநிலை மாற்றம், உணவு மற்றும் சுகாதாரம் மற்றும் மேம்பாடு, அத்துடன் டிஜிட்டல் மயமாக்கல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற சிக்கல்கள் இதில் அடங்கும்.


குவாட் தலைவர்கள் ஜப்பானில் மட்டுமே சந்திப்பார்கள்!


அமெரிக்காவில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அதிபர் ஜோ பைடன் ஆஸ்திரேலியா பயணத்தை ஒத்திவைத்துள்ளார். இதன் பின்னர் சிட்னியில் நடைபெறவிருந்த உத்தேச குவாட் நாடுகளின் தலைவர்களின் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. QUAD குழுவின் தலைவர்கள் இந்த வாரம் ஹிரோஷிமாவில் சந்திக்கலாம் என குவாத்ரா தெரிவித்துள்ளார். இதில், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.


மேலும் படிக்க - காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டுக்கு ₹62000 கோடி தேவை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ