பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை மே 28 அன்று திறந்து வைப்பார்!

பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டம் என்று அழைக்கப்படும் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் சுமார் 150 ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும். இதில், எதிர்காலத்திற்கான அனைத்து தேவைகளை கருத்தில் கொண்டு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 21, 2023, 02:17 PM IST
பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை மே 28 அன்று  திறந்து வைப்பார்!  title=

நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தனது கனவு திட்டத்தை மே 28-ம் தேதி தொடங்கி வைக்கிறார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற வளாகத்தில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் மிகவும் மேம்பட்ட முறையில் கட்டப்பட்டுள்ளது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் 2014 மே 26ஆம் தேதி அமைக்கப்பட்ட பாஜக ஆட்சியின் 9 ஆண்டுகளும் மே 26ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த சந்தர்ப்பத்தை மனதில் கொண்டு மே 28 ஆம் தேதி புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

முன்னதாக மே 30-ம் தேதி திறப்பதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது மே 28 ஆம் தேதி திறக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் மக்கள் தொகை, லோக்சபா, ராஜ்யசபா ஆகியவற்றில் அதிக இடங்கள் தேவைப்படுவதையும், பழைய கட்டடம் சிதிலமடைந்ததையும் கருத்தில் கொண்டு, புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இது மிகவும் நவீனமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதில் பல தனித்துவமான வசதிகள் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது. புதிய பார்லிமென்ட் மாளிகையின் பார்வை எப்படி இருக்கும், அதன் சிறப்பு என்ன என்பதை படங்களில் பார்க்கலாம்.

கொரோனா காலத்தில் பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்

புதிய இந்திய நாடாளுமன்றம்: சுதந்திர இந்தியாவின் முதல் நாடாளுமன்ற கட்டிடத்தின் அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். அதன் அடிக்கல் 2020 டிசம்பர் 10 அன்று கொரோனா காலத்தில் நாட்டப்பட்டது. அதன் பிறகு, 2021 ஜனவரி 15 அன்று கட்டுமானம் தொடங்கியது. இதன் கட்டுமானப் பணிகளை முடிப்பதற்கான காலக்கெடு 2022 நவம்பரில் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், சில காரணங்களால் 5 மாதங்கள் தாமதமாக முடிவடைகிறது.

மேலும் படிக்க - காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டுக்கு ₹62000 கோடி தேவை!

புதிய பாராளுமன்ற கட்டிடம் நான்கு மாடிகளுடன் நிலநடுக்கத்தை தாங்கும் திறன் கொண்டது

புதிய பாராளுமன்ற கட்டிடம் சுமார் 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது, இதில் 4 மாடிகளில் வெவ்வேறு பாகங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த கட்டிடம் பழைய பாராளுமன்ற கட்டிடத்தை விட சுமார் 17 ஆயிரம் சதுர மீட்டர் பெரியது, இது வலுவான நிலநடுக்கத்தால் கூட பாதிக்கப்படாது என்று கூறப்படுகிறது. புதிய பார்லிமென்ட் மாளிகையில், கியான் துவார், சக்தி துவார் மற்றும் கர்ம துவார் என்ற பெயர்களில் 3 கதவுகள் செய்யப்பட்டுள்ளன. இது தவிர, எம்.பி.க்கள் மற்றும் பிற விஐபி விருந்தினர்களுக்கு தனி நுழைவாயில் வைக்கப்பட்டுள்ளது. புதிய கட்டிடத்தின் கட்டிடக் கலைஞர் பிமல் படேல், இந்த கட்டிடம் அடுத்த 150 ஆண்டுகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று கூறுகிறார்.

கட்டிடத்தின் அட்வான்ஸ் செக்யூரிட்டி சிஸ்டம்

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நவீன வளங்கள் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த மேம்பட்ட அமைப்பு காரணமாக, ஹெடெக் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கஃபே மற்றும் டைனிங் ஏரியாவும் இதில் ஹைடெக் ஆக்கப்படுகிறது. இது தவிர, பல்வேறு சந்திப்பு அறைகளிலும் மிகவும் மேம்பட்ட உபகரணங்களுடன் பொருத்தப்பட்டுள்ளன. மேம்பட்ட வசதிகளுடன் கூடிய பொதுவான அறைகள், பெண்கள் ஓய்வறை மற்றும் விஐபி லவுஞ்ச் ஆகியவையும் கட்டிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மக்களவை - மாநிலங்கள் அவையில் எம்.பி.க்களுக்கு 1272 இடங்கள்

மக்களவை - மாநிலங்கள் அவை புதிய பார்லிமென்ட் மாளிகையில் மொத்தம் 1,224 எம்.பி.க்கள் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அதே நேரத்தில் தற்போதுள்ள பார்லிமென்ட் மாளிகையில் 870 எம்.பி.க்கள் மட்டுமே அமர முடியும். நாட்டில் அதிகரித்து வரும் மக்கள்தொகை காரணமாக எதிர்கால எல்லை நிர்ணயத்தை கருத்தில் கொண்டு, மக்களவை மற்றும் ராஜ்யசபாவில் இடங்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. லோக்சபாவில் 848 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 384 எம்.பி.க்களும் அமர முடியும். ஆனால், பழைய பார்லிமென்ட் கட்டடம் போல், கூட்டுக் கூட்டத் தொடருக்கான மைய மண்டபம் கட்டப்படவில்லை. மாறாக மக்களவையிலேயே 1224 பேர் ஒன்றாக அமர்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மக்களவையின் பார்வையாளர்கள் கேலரியில் 336 விருந்தினர்களுக்கு இருக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மார்ஷல்கள் மற்றும் பணியாளர்களுக்கும் புதிய சீருடைகள் இருக்கும்

பார்லிமென்ட் கட்டடத்தின் புதிய கட்டடம் மட்டும் தயாராகவில்லை, பழைய பார்லிமென்ட் மாளிகையின் பல பாரம்பரிய பழக்க வழக்கங்களும் கைவிடப்பட்டு வருகின்றன. புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு மார்ஷல்கள் மற்றும் பணியாளர்களும் புதிய ஆடைகளை அணிவார்கள். இந்த புதிய சீருடையை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (என்ஐஎஃப்டி) தயாரித்துள்ளது.

அரசியலமைப்பு மண்டபம் நடுவில் இருக்கும், அதில் அரசியலமைப்பு வைக்கப்படும்

புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் நடுவில் அரசியலமைப்பு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது, அதில் இந்திய அரசியலமைப்பின் நகல் வைக்கப்படும். இதனுடன், தேசப்பிதா மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல், சுபாஷ் சந்திரபோஸ் போன்றோரின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்படும்.

மேலும் படிக்க | Karnataka: கர்நாடகாவின் அடுத்த முதல்வர் சித்தராமையா? ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News