ஹைதராபாதில் நடைபெறவுள்ள டிஜிபி மாநாட்டில், பிரதமர் மோடியும் இன்று பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனைத்து மாநில காவல் துறை தலைவர்களின் (டிஜிபி) வருடாந்திர மாநாடு, ஹைதராபாதில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் தேசிய போலீஸ் அகாதெமியில் இன்று தொடங்குகிறது.


இந்த மாநாட்டினை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடக்கி வைக்கிறார். அவருடன் உள்துறை இணையமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவால் உள்ளிட்டோர் மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.


அதைத் தொடர்ந்து, மாநாட்டின் ஒரு பகுதியாக சனிக்கிழமை காலை நடைபெறும் யோகாசன நிகழ்ச்சியில், காவல் துறை தலைவர்களுடன் சேர்ந்து பிரதமரும் யோகாசனப் பயிற்சியில் பங்கேற்கவுள்ளார். 


இந்த மாநாட்டில் பயங்கரவாதம், நக்ஸல் தீவிரவாதம் போன்றவற்றை ஒடுக்குவது, சைபர் குற்றங்களைத் தடுப்பது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.