ஆசிரியர் தின வாழ்த்துக்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று டிவிட் செய்து தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறைந்த குடியரசுத் தலைவர் டாக்டர்.ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான இன்று (செப்டம்பர் 5-ம்) இந்தியா முழுவதும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 


இந்தியாவின் 2-வது குடியரசுத் தலைவரான ராதாகிருஷ்ணன் சிறந்த கல்வி மேதையாவார். ஆகையால் இவரது நினைவை போற்றும் வகையில் ஆண்டு தோறும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.


அதன்படி இன்று கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்திற்கு பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளதார். அதில்:- 


சமுதாயத்தில் சிந்தனை வளர்ச்சிக்காகவும், மகிழ்ச்சியான கல்விக்காகவும் தங்களை அர்ப்பணிப்பவர்கள் ஆசிரியர்கள் என்று தெரிவித்துள்ளார். 


ஆசிரியர்கள் தினமான இன்று ஆசிரியர்கள் வர்க்கத்திற்கு தலை வணங்குவதாகவும் கூறியுள்ளார். 


தலை சிறந்த ஆசிரியராகவும், தேசியவாதியாகவும் வாழ்ந்த டாக்டர்.ராதாகிருஷ்ணனுக்கு இத்தருணத்தில் நன்றியை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.