இன்று தமிழகம் முழுவதும் உழவர் திருநாளாம் அறுவடைத்திருநாள் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் உலக முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படும் மகரசங்கராந்தி தினத்தை முன்னிட்டு அந்தந்த மொழிகளில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.


தமிழில் அவர் பதிவிட்டிருப்பதாவது: தமிழ் மக்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். இத்திருநாள் அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி, நல்லிணக்கத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்கட்டும் என பதிவிட்டுள்ளார்.