4 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வியட்நாம், சீனா ஆகிய நாடுகளுக்கு இன்று பயணம் மேற்கொள்கிறார். முதலில் வியட்நாம் செல்லுகிறார், அந்த நாட்டுடன் ராணுவம், பாதுகாப்பு, வர்த்தகம் போன்ற துறைகளில் இரண்டு நாடுகளில் உறவை வலுப்படுத்துவது பற்றி அந்நாட்டின் முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தயுள்ளார். 


அதன் பிறகு நாளை சீனா செல்லும் பிரதமர் இரண்டு நாட்கள் நடைபெறும் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். மேலும் சீன அதிபர் ஜி ஜின் பிங்குடன் பேச்சுவார்த்தை நடதுகிறார்.
 
'பிரிக்ஸ்' நாடுகளின் தலைவர்கள் கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். இரு நாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி வரும் 5-ம் தேதி இந்தியாவுக்கு திரும்புகிறார்.