அசாம் மாநிலம் கவுகாத்தியில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று தொடங்கியது.  இந்த மாநாடு 3-ம் தேதி 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது.  இந்த மாநாட்டில் 20 நாடுகளுக்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள், தொழில்வல்லுனர்கள் பங்கேற்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.  இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் அசாம் முதல்-மந்திரி சர்பானந்தா சோனாவால்,  பூட்டான் பிரதமர் ஷெரிங் டொப்கே மற்றும் தொழிலதிபர்கள்  கலந்து கொண்டனர்.