சண்டிகர்: பிரதமர் நரேந்திர மோடி இன்று பஞ்சாப் மாநிலம் செல்கிறார். அங்கு பதிந்தா மற்றும் அனந்புர் ஷகிப் பகுதிகள் மோடி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும், பதிந்தா பகுதியில்  ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸில் (எய்ம்ஸ்) மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி, அங்குள்ள மக்கள் மத்தியில் உரையாற்றுகிறார். 


பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் மற்றும் ஒன்றிய உணவு துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் இவர்கள் பிரதமர் மோடியை வரவேற்கிறார்கள்.


பின்னர், அனந்த்புரின் கேசர்கத் ஷகிப் பகுதியில் நடைபெறும் 10வது சீக்கிய குரு, குரு கோபிந்த் சிங்கின் 350வது ஒளி விழாவில் கலந்து கொள்கிறார்.


பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் மோடியின் பயணம் அங்குள்ள அரசியல் சூழலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.