விழா மேடையில் பிரதமர் மோடி மூதாட்டி ஒருவரின் காலை தொட்டு வணங்கிய சம்பவம் மிகவும் நிகழ்ச்சி அடையவைத்துள்ளது. தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் மோடியின் கனவு திட்டமான தூய்மை இந்தியா திட்டத்திற்கு பெரும் பங்களித்தவர்களை பாராட்டும் விழா சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் நடந்தது. 


இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்பொழுது குன்வர் பாய் என்ற 104 வயது மூதாட்டி தனது ஆடுகளை விற்று அதில் கிடைத்த பணத்தில் கழிப்பறை கட்டினார். அவரை பாராட்டி பிரதமர் அவருக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். அப்போது அந்த மூதாட்டியின் காலைத் தொட்டு மோடி வணங்கினார். மூட்டியின் காலை தொட்டு பிரதமர் வணங்கிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.