ஹைதராபாத்: மகளிர் கட்டண விடுதி ஒன்றில் தங்கியிருந்த பெண் பேராசிரியர் குளிக்கும் போது அதை வீடியோ எடுத்து வெளியிட்ட சம்பவம் தொடர்பாக அவ்விடுதி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த வியாழக்கிழமை இச்சம்பவம் நடந்ததுள்ளது. சம்பவம் நடைப்பெற்ற விடுதியில் அப்பேராசிரியர் குடியிருந்து வந்துள்ளார். 


கடந்த வியாழன் அன்று தான் குளிக்கையில் யரோ, கதவின் துவாரம் வழியாக படம்பிடித்துள்ளார்.  இதனை அறிந்த அப்பேராசிரியர் இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் அவ்விடுதி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.


பின்னர் கைது செய்தவரின் மொபைல் போனை அதிகாரிகள் சோதனை செய்தனர், ஆனால் அந்த போனில் வீடியோ இல்லை. கைதுசெய்யப்பட்டவரை விசாரிக்கையில் அவர் அந்த வீடியோவினை 10 வினாடிகள் தான் எடுத்ததாகவும், பின்னர் பயத்தில் அதனை அழித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.



ஹைதராபாத் காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.