தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நாளில் நாட்டின் அரசியல் தலைவர்கள் பலரும் புதுடெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினர்!



இந்நிலையில், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராணுவத்தளபதி பிபின் ராவத், கடற்படை தளபதி சுனில் லன்பா மற்றும் விமானப்படைத் தளபதி பிரேந்தர் சிங் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். 


மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.