ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்னை வந்த விமானத்தில் கோளாறு
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று பகல் 12 மணியளவில் சென்னை வந்து சேர்ந்தார். அவரை தொடரந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு வந்தார்.
புதுடெல்லி: மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று பகல் 12 மணியளவில் சென்னை வந்து சேர்ந்தார். அவரை தொடரந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு வந்தார்.
நடுவானில் அந்த விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. அந்த தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய இயலாது என்ற நிலை ஏற்பட்டதால் உடனே டெல்லி விமான நிலையத்திற்கு அந்த விமானம் திரும்பியது.