தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி (54) நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பு காரணத்தால் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவி மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.


நடிகை ஸ்ரீ தேவியின் மறைவு ஆழ்ந்த சோகத்தை கொடுக்கிறது. இந்திய சினிமா துறையின் ஜாம்பவானாக திகழ்ந்தவர். அவரது நடிப்புகள் பல நினைவில் நீங்காதவை, அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். திரையுலகின் மூத்தவரான ஸ்ரீதேவியின் பல்வேறு கதாபாத்திரங்கள் மறக்க முடியாதவை என்று குறிப்பிட்டுள்ளார்.