கொல்கத்தா: தொலைதூர பயணிகள் மற்றும் தினசரி பயணிகளுக்கு சுவையான மற்றும் சுகாதாரமான உணவை வழங்குவதற்காக, IRCTC நகரில் நன்கு அறியப்பட்ட ஒரு தனியார் உணவு சங்கிலியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்., நகரின் மையப்பகுதியில் நிலையத்தின் தெற்குப் பகுதியில் 60 நபர்களுக்கு அமரக்கூடிய இரண்டு மாடி உணவு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.


மேலும் இந்த உணவகம் பல மெயில், எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரயில்களை இயக்கும் ஸ்டேஷன் வழியாக பயணிக்கும் தினசரி பயணிகளின் பெரும் ஓட்டத்திற்கு இடையூறு விளைவிக்காமல் தனித்துவமான நூலிழையால் கட்டமைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


கிழக்கு ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இது அனைத்து பயணிகளுக்கும் ஒரு பரிசு, இதனால் அவர்கள் ஆரோக்கியமான உணவை நியாயமான விலையில் அனுபவிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


உணவுச் சங்கிலியின் தொழிற்சாலை விற்பனை நிலையத்திலிருந்து தயாரிப்புகள் அனைத்து தள்ளுபடிகளுக்கும் பின்னர் சிறந்த விலைக்கு விற்கப்படும் என்று உணவு நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.