பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்துள்ளார் அம்மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதைக்குறித்து பஞ்சாப் சட்டப் பேரவையில் அவர் வெளியிட்ட அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-


* விவசாயிகள் பெற்ற 2 லட்சம் ரூபாய் வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி


* 10 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள்.


* சிறு,குறு விவசாயிகளின் கடன்கள் மொத்தமும் தள்ளுபடி செய்யப்படும்.


* தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்துக்கான நிவாரணத் தொகை 3 லட்ச ரூபாயிலிருந்து 5 லட்சமாக உயர்வு.


* எல்கேஜி முதல் பி.ஹெச்.டி வரை மாணவிகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும்.


* பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 33 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படும். 


அண்மையில் நடைபெற்ற பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபை தேர்தலில் கேப்டன் அமரீந்தர் சிங் தலையிலான காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.