திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெறும் தேசிய அளவிலான தடகளப் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க வந்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, ஏழுமலையான் கோவிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்தார்.


அவருடன் பெற்றோர் மற்றும் சகோதரி வந்திருந்தனர். அவர்களுக்கு, ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.