மைசூர் மாணவியின் விருப்பத்தை நிறைவேற்ற அவருடன் ராகுல் காந்தி Selfi  எடுத்துக்கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மைசூரில் உள்ள மஹாராணி பெண்கள் கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் சிறப்பு விருந்தினராகப் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 


நிகழ்ச்சியில் பேசிய அவர் `நிரவ் மோடி ரூ.22,000 கோடி வங்கிப் பணத்தை ஏமாற்றி எடுத்துக் கொண்டு மாயமாகிவிட்டார். இந்த ரூ.22, 000 கோடியை, உங்களைப் போன்ற நாட்டில் உள்ள பெண்களிடம் கொடுத்தால், எத்தனை தொழில்கள் செய்யமுடியும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். தற்போது நாட்டில் வேலை வாய்ப்புகளை நம்மாள் உருவாக்க முடியவில்லை, ஏன் ஆளும் அரசாலும் உருவாக்க முடியவில்லை. 
இதற்குக் காரணம், திறமை உள்ளவர்களிடம் நிதி ஆதரவு கிடைக்காமல் இருப்பதே... என தெரிவித்தார். நிகழ்ச்சியில் அவர் பேசிக்கொண்டிருந்த போது திடீரென ஒரு மாணவி எழுந்து நின்று, “உங்களுடன் நான் Selfi எடுத்துக்கொள்ளலாமா?" என கேட்டார். இதற்கு சற்றும் மறுப்பு தெரிவிக்காத ராகுல் மேடையில் இருந்து கீழே இறங்கி அம்மாணவியுடன் Selfi எடுத்துக்கொண்டார்.


இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது!