திருப்பத்தூரைச் சேர்ந்த ஸ்வேதா என்ற திருநங்கை பிச்சை போடாததால், ரயில் பயணியை ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார். பின்னர் தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்ச்சி செய்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரயிலில் திருநங்கைகள், பயணியிடம் பணம் கேட்டு பெறுவது வழக்கமான ஒன்று தான்.


இந்நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த சத்தியநாராயணா என்பவர். இவர், தனது நண்பர்கள்  5 பேர் கட்டிட வேலைக்காக காட்பாடி மார்க்கத்தில் ரயில் ஏறி உள்ளார்.


அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி என்ற ஊரை ரயில் கடக்கும் போது, பயணி சத்திய நாராயணாவிடம் திருநங்கைகள் பணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் தர மறுத்துவிட்டார்.


இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, ஒரு கட்டத்தில், ஆத்திரமடைந்த திருநங்கை சத்தியநாராயணாவை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டார்.  படுகாயமடைந்த அவர் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சத்தியநாராயணா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.


சத்யாநாராயணாவை காப்பாற்ற முற்பட்ட அவருடைய  நண்பர்களும் காயம் அடைந்தனர்.


தகவலறிந்து வந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், திருநங்கை-ஸ்வேதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.