ரயிலில் பெண்மணி தவறவிட்ட 6 சவரன் நகை மற்றும் பணம் செல்போன் ஆகியவற்றை மீட்ட  காட்பாடி ரயில்வே போலீசார் அதனை உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் ரயில்வே போலீஸாருக்கு பாராட்டை பெற்றுத் தந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று 24ம் தேதி மாலை மைசூரில் இருந்து சென்னை வரை செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸில் C2கோச்சில் பயணம் செய்தவர் திருமதி பிரபாமணி. இவர் சம்பவத்தன்று மைசூரில் இருந்து பெங்களூர் வரை பயணம் செய்து வந்து தான் கொண்டு வந்த பையை மறந்து விட்டு இறங்கிவிட்டார்.


பின்னர் பெங்களூர் ரயில்வே போலீசில் தகவல் தெரிவித்து, பெங்களூர் ரயில்வே போலீசார் மூலம் காட்பாடி ரயில்வே இருப்புப் பாதை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து காட்பாடி வந்த சதாப்தி எக்ஸ்பிரஸில் போலீசார் சோதனை மேற்கொண்டதில் அந்தப் பெண்மணி தவறவிட்ட பேக்கை கைப்பற்றினர்.



அதிலிருந்த (46 கிராம்) 6 சவரன் தங்க நகை ரூபாய் 2520 மற்றும் ஒன் பிளஸ் செல்போன் உள்ளிட்டவைகளை மீட்டு பிரபா மணியிடம் ஒப்படைத்தனர் உடனடியாக செயல்பட்டு மீட்ட காட்பாடி ரயில்வே இருப்புப் பாதை போலீசாருக்கு பிரபாமணி தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.


மேலும் பிரபாமணி  தவறவிட்ட பொருள்களின் மதிப்பு ரூபாய் 3 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.


மேலும் படிக்க | ரயில் நிலையத்தில் தெரு நாய்க்கு சோறூட்டிய பெண்ணின் வீடியோ வைரல்!


மேலும் படிக்க | பாச மலர்களா என்று கேட்க வைக்கும் குட்டி பையன்களின் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR