புதுடெல்லி: ரயில் புறப்படுவதற்கு முன்பு தயாரிக்கப்படும் முதல் பட்டியலுக்குப் பிறகு முன்பதிவு பிரிவில் காலியாக உள்ள இடத்துக்கு டிக்கெட் எடுப்பவர்களுக்கு அடிப்படைக் கட்டணத்தில் 10 சதவீதம் குறைக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இந்த சலுகை வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தத் திட்டத்தை சோதனை முயற்சியாக அடுத்த 6 மாதங்களுக்கு அனைத்து ரயில்களிலும் கொண்டுவர தற்போது முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


ரயில் புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு முதல் பட்டியல் தயாரிக்கப்படும். அதன் பிறகு முன்பதிவு பிரிவில் காலியாக இருக்கும் இருக்கைகளுக்கு டிக்கெட் எடுக்கும் பயணிகளுக்கு கட்டணத் தொகை 10 சதவீதம் குறைவாக வசூலிக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.