நேருக்கு நேராக பேருந்தும் லாரியும் மோதியதில் 8 பேர் பலி; 20 பேர் படு காயம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அஜ்மீரில் உள்ள லமனா கிராமத்திற்கு அருகே பேருந்து ஒன்று லாரி மீது மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர், 20 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ராஜஸ்தானின் அஜ்மீரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 


இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். ஐந்து பேர் இறந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர், பலர் காயமடைந்தனர். இரண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது. விபத்து நடந்த பின்னர் ஒரு சிலரை மருத்துவமனைக்கு அழைத்து வருவதாக தகவல் கிடைத்தவுடன் அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் செய்திருந்தோம், ”என்று மருத்துவமனை கண்காணிப்பாளர் அனில் ஜெயின் கூறினார்.


"மூத்த மருத்துவர்கள் அனைத்து நோயாளிகளின் உடல்நிலையையும் பரிசோதித்துள்ளனர். அவர்கள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐந்து பேர் சடலமாக மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன. மேலும் மூன்று உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது," என்று அவர் மேலும் கூறினார்.


ஜெய்ப்பூரிலிருந்து குஜராத் நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்ததாக ஒரு பயணி தெரிவித்தார். விபத்து நடந்தபோது எதிர் பக்கத்தில் இருந்து இரண்டு லாரிகள் வந்து கொண்டிருந்தன.