3 ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெறித்துக் கொன்ற கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜஸ்தானில் 3 ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெறித்துக் கொன்றதாக சந்தேகிக்கப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட நபர் மின்வயரைப் பிடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளான்.


ஜலாவரில் தாத்தா பாட்டியுடன் வசித்து வந்த சிறுமி, பள்ளி முடித்து வீடு திரும்பினார். கால்நடை மேய்ப்புக்காக சென்ற சிறுமி வீடு திரும்பாத நிலையில், புதனன்று கடுகு வயலில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை நெறித்து கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.


சிறுமி மரணம் குறித்த தகவல் ஊருக்குள் பரவியவுடனே அதே கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞன் மின் வயரைப் பிடித்து தற்கொலைக்கு முயன்றான். செவ்வாய் அன்று இரவு மது அருந்திய நிலையில் இருந்த அந்த இளைஞன், சிறுமியுடன் இருந்ததைப் பார்த்ததாக சிலர் தெரிவித்துள்ளனர்.