கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கண்டறிய ரேபிட் கிட் பரிசோதனையைப் பயன்படுத்துவதை ராஜஸ்தான் நிறுத்தியுள்ளது, அதன் சுகாதார அமைச்சர், குறைந்த செயல்திறனைக் காரணம் காட்டி கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா நோய் தொற்று இருப்பதை விரைவாக கண்டறிய உதவும் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ என்ற பரிசோதனை கருவிகள் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கருவிகள் மூலம் உடனடியாக வைரஸ் தொற்றை கண்டறிய முடியும்.


இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ரேபிட் கிட் மூலம் பரிசோதனை செய்வது நிறுத்தப்பட்டது.  இது குறித்து ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை மந்திரி ரகு சர்மா கூறுகையில்.,  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் (ஐசிஎம்ஆர்) இருந்து ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை பெற்றோம். இது ராஜஸ்தானில் பயன்படுத்தப்பட்டது. ரேபிட் டெஸ்ட் கிட்  பரிசோதனை முடிவுகள் 90 சதவீதம் துல்லியமாக இருக்க வேண்டும், ஆனால் அது 5.4 சதவீதம் மட்டுமே இருந்தது. ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல்களையும் பின்பற்றினோம். ஆனால் அந்த கருவி இன்னும் தரத்தை பூர்த்தி செய்யவில்லை. எனவே சோதனைகளை நிறுத்தினோம் என்றார்.