ராஜ்யசபா எம்.பி., சசிகலா புஷ்பா மீது மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எம்.பி., சிவாவை கன்னத்தில் அறைந்த விசியத்தால் அதிமுக நிர்வாகிகாளால் தான் நிர்பந்திக்கப்படுவதாகவும், தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் ராஜ்யசபாவில் தெரிவித்தார். 


இந்நிலையில் சசிகலா மற்றும் அவரது கணவர் லிங்கேஸ்வரன் ஆகியோர் மீது பாளையங்கோட்டை சேர்ந்த ராஜேஷ் என்பவர் புகார் அளித்துள்ளார். டிராவல்ஸ் நடத்தி வரும் இவர் நெடுஞ்சாலை துறையில் புதிய ரோடு மற்றும் சாலைகளுக்கு நடுவில் அமைந்திருக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது ஆகிய பணிகக்கு கான்ட்டிராக்ட் எடுக்கு முடிவு செய்துள்ளார். இந்த பணியை வாங்கி தர வேண்டுமாறு ராஜேஷ் அவர்கள் சசிகலாவை சந்தித்துள்ளார். கான்ட்டிராக்ட் வாங்கி தருவதற்கு ரூ 20 லட்சம் எம்பி.,யிடம் 2 தவணையாக வழங்கியதாகவும். ஆனால் எவ்வித பணியும் பெற்று தரவில்லை என்றும் இதனால் சசிகலா எம்.பி., மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது புகாரில் கூறியுள்ளார். 


நெல்லை மாநகர கமிஷனர் சிவஞானத்திடம் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.