ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக்கோரிய மனுவை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரிப்பு! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்பட 7 பேர், கடந்த 27 ஆண்டுகளுக்கு வேலூர் மத்திய சிறையில் உள்ளனர்.  கருணை அடிப்படையில் இவர்களை விடுவிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தன. 


இந்நிலையில், 7 பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். மேலும், மாநில அரசின் கோரிக்கைகளை மத்திய அரசு பிரதிபலிக்கவில்லை என கருத்து தெரிவித்துள்ளார்.