முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான வீரபூமியில் இன்று காலை முதல் முக்கிய 
பிரமுகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ராஜிவ் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், அவரது தங்கை பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா ஆகியோரும் வந்து மரியாதை செலுத்தினர்.


மேலும், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், டெல்லியின் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ராஜிவ் நினைவிடத்துக்கு வந்து மரியாதை செலுத்தினர்.