பொதுத்தேர்தல் திட்டமிட்ட காலத்திலேயே நடைபெறும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிக் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவைத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் இதுகுறித்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிக் அவர்கள்... நாடாளுமன்ற தேர்தல் திட்டமிட்ட காலத்திலேயே நடைபெறும் என தெரிவித்துள்ளார்.


சட்டமன்றம், நாடாளுமன்றம் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. 


இந்நிலையில் இந்த ஆண்டு இருதியில் சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.


அதேவேலையில் மத்திய அரசின் பதவிக்காலமும் மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் நடைபெறவுள்ள 4 மாநிலத் தேர்தல்களோடு சேர்த்து, நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட வாய்ப்பு உள்ளது என தகவல்கள் வெளியாகி வந்தது. 


இந்நிலையில் இதுகுறித்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நாடாளுமன்ற தேர்தல் திட்டமிட்ட காலத்திலேயே நடைபெறும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்!