16 மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் 58 ராஜ்ய சபா உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் மார்ச் 16, 2018 அன்று நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய வரும் மார்ச் 12-ம் தேதி கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேல் அவைக்கான 58 உறுப்பினர்களின் பதவி காலம் வரும் ஏப்ரல் 2018-ல் முடிவடையவுள்ளது. இந்நிலையில் இந்த பதவிக்கான தேர்தல் குறித்து தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது...


இந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது...


"58 மாநிலங்களவை இடங்கள் வரும் ஏப்ரல்- மே மாதங்களில் காலியாகின்றன. அருணாச்சல பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், குஜராத் உட்பட 17 மாநிலங்களைச் சேர்ந்த 58 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் மார்ச் 23ல் நடைபெறும்.  இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி மார்ச் 12-ம் தேதி ஆகும்." என குறிப்பிடப்பட்டுள்ளது.