தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே பழைமையான மரகதலிங்கத்தை விற்க முயன்றதாக இருவரை போலீசார் கைது செய்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மரூதூர் பகுதியைச் சேர்ந்த கலியமுர்த்தி என்பவரிடம் இருந்த பழமை வாய்ந்த மரகதலிங்கத்தை விற்க முயற்சி செய்து வந்துள்ளார். இந்த தகவலை அறிந்த போலீசார், அவரை கண்காணித்து வந்தனர். 


நேற்றிரவு கோவிந்தபுரத்தில் கலியமூர்த்தி (58) மற்றும் அவரது நண்பர் விஜயராகவன் (37) ஆகியோர் மரகதலிங்கத்தை விற்க வந்துள்ளனர். அப்போது அங்குவந்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் இருவரையும் மடக்கிப் பிடித்து மரகதலிங்கத்தை பறிமுதல் செய்தனர்.


கைது செய்யப்பட்ட இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.