கடந்த 2016 ஆண்டு நவம்பர் மாதம் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. பின்னர், புதிதாக 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தது.


இந்நிலையில் புதிய 200 ரூபாய் நோட்டுகளை விரைவில் வெளியிடப்போவதாக இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மத்திய நிதி அமைச்சகத்திடமும் இதுகுறித்து ரிசர்வ் வங்கி அனுமதி வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.