குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் லஷ்கர் பயங்கரவாத அமைப்பினர் குடியரசு தின விழாவின் போது நாசவேலையில் ஈடுபடலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனால் டெல்லி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 60,000 மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


டெல்லியில் உள்ள முக்கிய மார்க்கெட் பகுதிகளான சரோஜினி நகர், லாஜ்பத் நகர், கமலா மார்க்கெட், நிஜாமுதீன் மற்றும் புது டெல்லி ரயில் நிலையம், பஸ் நிலையம் போன்ற இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 


குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி காலை 10.35 மணி முதல் பிற்பகல் 12.15 மணி வரை இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் தரையிரங்கவும், புறப்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 


குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் ராஜபாதை முதல் செங்கோட்டை வரையிலான பாதைகளில் உள்ள அனைத்து சாலைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன.