பெங்களுருவில் உணவு விநியோக தகராறில் ஸ்விக்கி ஊழியரை கத்தியால் தாக்கிய உணவக பணியாள் கைது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஞாயிறன்று ஒரு துரித உணவகத்துக்கு சென்ற 29 வயதுடைய திவாகர் என்ற ஸ்விக்கி ஊழியர், தனது வாடிக்கையாளருக்கு உணவை வழங்க அவர் ஆடர் செய்த உணவை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். சற்று நேரத்தில் அவரை உணவகத்தில் இருந்து தொடர்பு கொண்ட ஒரு நபர், உணவை பிக் செய்ததாக தங்களுக்கு செயலியில் காட்டவில்லை என்று கூறி திருப்பி அழைத்துள்ளார்.


இதனை தொடர்ந்து உணவகத்திற்கு திரும்பி சென்று தனது செயலியில் உணவு பிக் அப் செய்யப்பட்டுள்ளது போல் காட்டியதை எடுத்துரைத்தாகவும், ஆனால் அதனை ஏற்காமல் உணவக ஊழியர் சமையல் அறையில் உள்ள கத்தியை வைத்து தாக்கிவிட்டதாகவும் திவாகர் கூறியுள்ளார்.


கையில் வெட்டுப்பட்ட ஸ்விக்கி ஊழியரை அங்கிருந்தவர்கள் மருத்துவ மனையில் சேர்த்தனர். இதனிடையே கத்தியால் தாக்கிய உணவக ஊழியர் பிரேமை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதையடுத்து , அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.