ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவர் நடத்திய திடீர் தாக்குதல்களுக்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுமார் 7 பேர் உயிரிழந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தான் படையினர் வியாழக்கிழமை இரவு நடத்திய தாக்குதலில், இந்திய வீரர் ஒருவர் காயமைடந்தார். 
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில் கதுவா மாவட்டம் ஹிராநகர் செக்டாரிக்கு உள்பட்ட போபியா பகுதியில் இந்திய நிலைகளை மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.


இந்திய ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த சுமார் 7 ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர். மேலும் சர்வதேச எல்லை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.