நாட்டையே உலுக்கிய ஹரியானா கூட்டு வன்புணர்ச்சி வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் பலர் தேடப்பட்டு வருகின்றனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹரியானாவின் ரிவாரி பகுதியை சேர்ந்த 19-வயது கல்லூரி மாணவி கடந்த விழாயன் அன்று பலவந்தமாக கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.



சம்பவத்தன்று மாலை பாதிக்கப்பட்ட பெண் தனது பயிற்சி வகுப்புக்குச் சென்று வீடு திரும்பினார், அப்போது அவ்வழியாக வந்த காரில் இருந்த சிலர் அச்சிறுமியை கடத்திச் சென்று கொடூரமான முறையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் தெரிகிறது. பின்னர் கனினா என்ற பகுதியில் உள்ள பேருந்து நிறுத்ததில் அச்சிறுமியை காரிலிருந்து கீழே வீசிவிட்டு சென்றுள்ளனர்.


இது குறித்து அந்தப் பெண் தெரிவிக்கையில் தன்னை பலாத்காரம் செய்தவர்கள் அதே ஊரை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார்.


இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளிக்க முயன்றுள்ளனர், எனினும் காவல்துறையினர் இந்த புகாரை ஏற்க மறுத்துள்ளது. இதனையடுத்து அவர் நேரடியாக காவல்துறை அலுவலரிடம் புகார் அளித்துள்ளதாகவும் தெரிகிறது. 


இச்சம்பவம் குறித்து மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக 3 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மனிஷ், நிஷ்ஷு மற்றும் பங்கச் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் பன்கச் என்பவர் ராணுவத்தில் பணிபுரிபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தில் மேலும் பலர் சம்பந்தப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.